Showing posts with label ayirathil oruvan. Show all posts
Showing posts with label ayirathil oruvan. Show all posts

Monday, July 13, 2009

மாலை நேரம் - Aayirathil Oruvan

மாலை நேரம் .. மழை தூரும் காலம் .. என் ஜன்னல் ஓரம் நிற்கிறேன் ..
நீயும் நானும் .. ஒரு போர்வைக்குள்ளே சிறு மேகம் போலே மிதக்கிறேன் ..

ஓடும் காலங்கள், உடன் ஓடும் நினைவுகள், வழி மாறும் பயணங்கள் தொடர்கிறதே ..
இது தான் வாழ்கையா, ஒரு துணை தான் தேவையா, மனம் ஏனோ என்னையே கேட்கிறதே ..

ஓஹோ ..



காதல் இங்கே ஓய்ந்தது .. கவிதை ஒன்று முடிந்தது .. தேடும் போதே தொலைந்தது .. அன்பே ..
இது சோகம் ஆனால் ஒரு சுகம் .. நெஞ்சின் உள்ளே பரவிடும் .. நாம் பழகிய காலம் பரவசம் அன்பே ..

இதம் தருமே ..



உன் கரம் கோர்க்கையில் நினைவு ஓராயிரம் .. பின் இரு கரம் பிரிகையில் நினைவு நூறாயிரம் ..
காதலில் விழுந்த இதயம் மீட்க முடியாதது .. கனவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது ..

ஒரு காலையில் நீ இல்லை .. தேடவும் மனம் வரவில்லை ..
பிரிந்ததும் புரிந்தது .. நான் என்னை இழந்தேன் என ..

-காதல்

ஒரு முறை வாசலில் நீயாய் வந்தால் என்ன?
நான் கேட்கவே துடித்திடும் வார்த்தை சொன்னால் என்ன?

இரு மனம் சேர்கையில் பிழைகள் பொறுத்துக்கொண்டால் என்ன?
இரு திசை பறவைகள் இணைந்தே விண்ணில் சென்றால் என்ன?

என் தேடல்கள் நீ இல்லை ..
உன் கனவுகள் நான் இல்லை ..
இரு விழிப்பார்வையில் நாம் உருகி நின்றால் என்ன?

-மாலை நேரம்

Wednesday, June 24, 2009

indha paadhai lyrics .. from aayirathil oruvan ...

A philosophical song..

இந்த பாதை எங்கு போகும்
இந்த தேடல் எங்கு சேர்க்கும்
நான் இங்கு கலந்தேன் ஒரு புயலில்
நான் ஒரு இலை தான் இந்த காட்டில்

முதலும் முடிவும் இல்லை..
இலக்குகள் எல்லைகள் இல்லை..
கரையின் தொல்லை கடலில் இல்லை..
கடலும் மறைந்தால் மனம் இல்லை..

ஆடி கூத்தாடி நீ திரிந்தால்
ஏது சோகம்
உலகை பார்த்து வாழ்ந்தால்
உன் வாழ்க்கை மெல்ல சாகும்

ஓடம் நதியில் போகும்..
நதியும் ஓடம் மேல் போகும்..
அழுவதும் சிரிப்பதும் உன் வேலை....
நடப்வை நடக்கட்டும் அவன் லீலை..
மரங்கள் இங்கு பேசும்..
பனி துளிகள் மாயம் காட்டும்
இதை நீ கொஞ்சம் உணர்ந்தால்
பிற உயிர்கள் உன்னை தொடரும்..

Thursday, June 18, 2009

thaai thindra manne lyrics.. from aayirathil oruvan..

This song is from Ayirathil Oruvan {upcoming Selvaragavan movie}. Excellent Music by GV Prakash Kumar.

Listen to the song below..


எழுத்துப் பிழையிருந்தால் திட்டவும் ...
வைரமுத்துவின் அற்புதமான வரிகளில்..

தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

தாய் தின்ற மண்ணே
பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

நெல்லாடிய நிலமெங்கே?
சொல்லாடிய அவையெங்கே?
வில்லாடிய களமெங்கே?
கல்லாடிய சிலையெங்கே?

தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே

கயல் விளையாடும் வயல் வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்
காவிரி மலரின் கடிமணம் தேடி
கருகி முடிந்தது நாசி

சிலை வடி மேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்

புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக் கறி பொறிப்பதுவோ?
காற்றை குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பதுவோ?
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ?
மன்னன் ஆளுவதோ?

தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே

நொறுங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு
அழுகின்ற அரசன்

பழம் தின்னும் கிளியோ?பிணம் தின்னும் கழுகோ?
தூதோ? முன் வினை தீதோ?
களங்களும் அதிர களிறுகள் பிளிற
சோழம் அழைத்து போவாயோ?
தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்

அதுவரை..

தமிழர் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே.. அழாதே!
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாளே.. அழாதே!
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உறையில் தூங்கும் வாளே.. அழாதே!
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே.. அழாதே!

நெல்லாடிய நிலமெங்கே?
சொல்லாடிய அவையெங்கே?
வில்லாடிய களமெங்கே?
கல்லாடிய சிலையெங்கே?

தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்